Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

சென்னை: குடோனில் பதுக்கிய ரூ.7 கோடி செம்மரக்கட்டைகள் பறிமுதல்

ஆகஸ்டு 04, 2019 12:52

சென்னை: செங்குன்றம் அருகே நல்லூர் ஊராட்சிக்குட்பட்ட அன்னை இந்திரா நினைவு நகரில் உள்ள தனியார் குடோன் ஒன்றில் செம்மரக் கட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. 

சம்பவ  இடத்துக்கு போலீசார் விரைந்து சென்றனர். அங்கு குடோன் பூட்டப்பட்டு இருந்தது. பூட்டை உடைத்து போலீசார் உள்ளே சென்ற போது அங்கு ஏராளமான செம்மரக்கட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. அங்கிருந்து மொத்தம் 7 டன்  எடை கொண்ட செம்மரக்கட்டைகளை போலீசார் பறிமுதல்  செய்தனர். அவற்றின் மதிப்பு ரூ.7 கோடி ஆகும். குடோன்  இருக்கும் இடம் சோழவரம் போலீஸ் நிலைய  பகுதி ஆகும். 

எனவே இது குறித்து சோழவரம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் வடிவேல் முருகன், சப்-இன்ஸ்பெக்டர் வேலுமணி மற்றும்  போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். இது குறித்து சீத்தஞ்சேரி வனத்துறை அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்களும் அங்கு சென்று விசாரணை நடத்தினர்.  

செம்மரக்கட்டைகள் பதுக்கிய குடோன் யாருடையது? எங்கிருந்து இந்த கட்டைகள் கொண்டு வரப்பட்டது? என பல்வேறு கோணங்களில் விசாரணை  நடத்தி வருகின்றனர்.

தலைப்புச்செய்திகள்